ரஜினி எனும் மாயோன் - 1

போன வாரம் படையப்பா படம் போட்டிருந்தார்கள் , என்ன ஒரு படம் . இப்பொழுது தொலைக்காட்சியில் போட்டாலும் டி ஆர் பி யை அள்ளி தரும் அமுத சுரபியாக இருக்கிறது . முத்து / பாட்ஷா எல்லாம் இதே கேட்டகரி படங்கள் தான் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.  அதே நேரத்தில் தான் அண்ணாதே படமும் ரிலீஸ் ஆகி நன்றாக ஓடியதாகவும், இல்லை சுமார் தான் என்று இரண்டு விதங்களாகவும் சொல்லபடுகிறது ஆனால் சில விமர்சகர்கள் கழுவி ஊத்துகிறேன் பேர்வழி என்று வன்மத்தை கக்கியும் வருகின்றனர் . இதையெல்லாம் ஒதுக்கி வைத்து ரஜினி எனும் நடிகனின், ஒரு மாபெரும் மனிதனின்  கடைசி கட்ட திரை வரலாற்றை உற்று நோக்கினால் ஒரு உண்மை புலப்படும் . 


அது ஒரு சோக கதையின் தொடக்கமாகவும் அமையும் .





சரி கதையை ஆரம்பிப்போமா? பாட்ஷா படத்தில் ஒரு பாட்டு வரும். எட்டு எட்டா மனுஷ வாழ்க்கை பிரிச்சுக்கோ என்ற பாடல் தான் அது . அதில்  கடைசி எட்டிற்கு அடுத்து  retirement சொல்லி இருப்பார்கள், அது இல்லையேல் நிம்மதி இல்லை என முடியும்   . ஆனால் அப்படி ஒன்றும் இல்லாத மனிதராக ரஜினி அவர்கள் மாறி விட்டாரோ என்றே தோன்றுகிறது


படையப்பா என்னும் மாபெரும் வெற்றி படம் தான் அவரது திரை துறை கடைசி அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கிறது. அதற்கு சில வருடங்களுக்கு முன்பு தான் அவர் ஜெயலலிதா அம்மையாருக்கு எதிராக ஒரு கருத்தை சொல்லி , ஆட்சி கட்டிலில் இருந்து இறக்கி வைத்தார். அதே டெம்ப்ளேட் இந்த படத்திலும் வரும் . பொன்னியின் செல்வனில் இருந்தே மூல கதை எடுக்க பட்டதாக சொன்னாலும் , நீலாம்பரி யாரை நியாபக படுத்துகிறார் என்று யோசித்தால் விஷயம் பிடிபடும் 


ஏன் படையப்பாவில் இருந்து இந்த கட்டுரையை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்கான பதில் இது தான் . இந்த படம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது  இந்த படத்தில் இருந்து தான் விக் அணிய ஆரம்பித்தார் ரஜினிகாந்த். அதே போல எண்பதுகளில் அவருக்கு ஜோடியாக நடித்த லட்சுமி இந்த படத்தில் அவரின் அம்மாவாக புரொமோஷன் வாங்கி இருந்தார். இது ஒரு மிக முக்கியமான பாய்ண்ட்


எண்பத்தி ஆறு தியேட்டர்களில் நூறு நாட்கள் தாண்டி இந்த படம் ஓடியதாக விக்கிபீடியா சொல்கிறது . வசூல்  44 கோடி. ரஜினி என்றும் தான் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று நிரூபித்த படம். இது அவரின் சொந்த தயாரிப்பில் வெளியான படம். அது அள்ளிதந்த லாபத்தில் அடுத்த படமும் சொந்த படம் என்று முடிவெடுக்கப்பட்டது


இந்த படம் முழுக்கவே  லதா ரஜினி அவர்களின் கட்டுப்பாட்டில் தயாரானது. ரஜினி அவரது குருநாதர் பாபாஜியை சந்தித்து வந்து , அதை  வைத்து ஒரு கதை எழுதி இருந்தார்  ரஜினிக்கு ஆகப்பெரிய ஹிட்டான, பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவை இயக்குனராக ஒப்பந்தம் செய்கிறார்கள். மற்றொரு ஆஸ்தான இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அந்த கதையை கேட்டு எஸ்கேப் ஆனரா என்று தெரியவில்லை. ஆக மொத்தம் "பாபா" படம் தொடங்கியது


அந்த படம் ரஜினி திரை வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு படம். லதா ரஜினியின் பிசினஸ் வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனை படம். டீ தூளில் ஆரம்பித்து, பிஸ்கட் அது இது என்று , பாபா படத்தை வைத்து லதா ரஜினி அவர்கள்  நடத்திய பிசினஸ் பற்றி ஒரு குறு நாவலே எழுதலாம். படையப்பா என்னும் சூப்பர் டூப்பர் படத்தை அடுத்து வருவதினால் விண்ணை முட்டும்  எதிர்பார்ப்பு . அதை நன்றாக உணர்ந்த லதா அவர்கள் வெறும் ஐந்து கோடி பட்ஜெட்டில் (ரஜினி சம்பளம் தவிர்த்து) உருவான இந்த படத்தை 50-80 கோடி வரை பிசினஸ் செய்து விட்டார். இவ்வளவு விலையா என்ற முணுமுணுப்புகள் காதில் படும் படி கேட்டது


படம் ரிலீஸ் ஆனது. எப்படி ஒரு நாத்திகன் , ஆத்திகன் ஆகிறான் என்பது தான் ஒன் லைன் முதல் நாள் ஏக கூட்டம். ஆங்காங்கே கலகக்குரல்களும் எழ ஆரம்பித்திருந்தன. நீளம் அதிகம், சுமாரான கதை, தேவை இல்லாத விஷயங்கள் பல இந்த படத்தில் இருந்தது. முக்கியமாக  படத்தில் ரஜினி வழக்கமான மேக்கப் இல்லாமல் சற்றே சோர்வடைந்த கெட்டப்பில் வளம் வருவார். அதை மறைக்க நொடிக்கு நொடி ஒரு பன்ச் வசனமோ, பில்ட் அப்போ இருக்கும். இந்த காரணங்களினால் கூட்டம் குறைய ஆரம்பித்தது. படம் பிளாப் என்று ரஜினியின் காத்து படவே சொல்ல ஆரம்பித்தனர் 



படம் சுமாரான வசூலை பெற்றதாகவே இன்று வரை நம்பப்படுகிறது, ஆனாலும் அன்றைய தேதியில் படத்தை ஒரு டிசாஸ்டராகவே மதிப்பிடட்டார்கள் படம், 35 கோடி வசூல் செய்தது. மினிமம் கியாரண்டி என்ற முறையில் விற்றதினாலும், தனது குருவை பற்றிய கதை என்பதினாலும் ரஜினி, பணத்தை திருப்பி கொடுத்தார். அவரின் சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தில் விழுந்த முதல் விரிசல் அது. சுரேஷ் கிருஷ்ணாவை பாதாளத்தில் விழ வைத்த படம் அது


பாமாக வேறு ரஜினி சிகரெட் பிடிக்கிறார் என்று வட தமிழகத்தில்  பெட்டியை  தூக்கி சூறையாடினார்கள். இது தான் கடைசி படம் என்று நினைத்த ரஜினிக்கு திரும்பும் பக்கம் எல்லாம் அடி. வயதான சிங்கத்தின் உறுமல் சற்றே அதிமாக இருக்கும். அது போல, விண்ணை தொட்ட ரஜினிக்கே தன்னை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை .. நிம்மதியாக திரை பயணத்தை முடிக்கலாம் என்றிருந்த ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலியை பதம் பார்த்தது பாபா படம். அவரது வாழ்வின் முக்கியமான ஒரு முடிவை எடுத்தார் ரஜினி ...


தொடரும் .......


ஏழாவது குப்பை தொட்டி


அடுத்த  வேளை சாப்பாட்டுக்கு சிங்கி தான் என்பது ரவிக்கு புரிந்து  விட்டது . சுதா  ஹோட்டலில் இருந்து விழும்  எச்சில் இலைகளுக்கு பக்கத்தில், இடம் போட்டு படுத்தே விட்டான் கோபி. கால் மணி நேர தாமதத்தால் அம்மா உணவக தொட்டியையும் தவற விட்டிருந்தான் . பசி வயிற்றை பதம் பார்க்க ஆரம்பித்ததுஎன்னடா வாழ்க்கை இது என்று நொந்தான் .


சரி கடவுள் நமக்கென்று ஒரு குப்பை தொட்டியை கூடவா ஒதுக்க மாட்டார் என்று  தேட ஆரம்பித்தான் . ஒரு ஐந்து  ரூபாய் இருந்தால் கூட புது இட்லியை ருசி பார்க்கலாம் . அதையும் திருடி, குடித்து, கவுந்து கிடந்தான் அவனது அப்பன் . கல்லை தூக்கி தலையில் போட்டு விடலாம் என்று தோன்றியது . வேண்டாம்  சிறுவர் ஜெயிலை பற்றி அவனுக்கு இதுவரை வந்த  தகவல்கள் நம்பிக்கை அளிப்பதாக இல்லை . வெறும் சோற்றுக்கு ஆசைப்பட்டு அங்கு போய் குனியவேண்டுமாசோறு கிடைக்காமலா போய்விடும். அத்தோடு அப்பன் போய்விட்டால்,  பாலத்திற்கு அடியில் இருக்கும் வீடு போய் விடும்பெருசுகளுடன் சண்டை செய்யும் அளவிற்கு தசை இல்லைஅவன் இருந்து தொலையட்டும்..


இந்த யோசனைகள் பசியை அதிகப்படுத்தின.  இதுவரை மூன்று குப்பை தொட்டிகளை பார்த்து விட்டான்.. ஒரு கருமமும் கிடைக்கவில்லை . இந்த காலத்தில் அவரவருக்கு ஒரு  சிக்கல்எப்பொழுதுமே சிக்கல்களுடன் இருக்கும் இவனுக்கு இன்னும் பல சிக்கல் . கல்யாண மண்டபமாகட்டும் , சிறு ஹோட்டல்கள் ஆகட்டும் , அனைத்தையும் மூட வைத்திருந்தது இந்த கொரோனா. 


சரி குப்பை தொட்டிகளாவது நன்றாக இருக்கிறதா . கார்ப்பரேஷன் கனவான்கள் , சின்ன குப்பை தொட்டியை எல்லாம் பெரியதாக மாற்றிவிட்டார்கள்அதில் உள்ளே குதிக்காமல் ஒன்றையும் எடுக்க முடியாதுஒரு முறை இவன் உள்ளிருந்த போது ஒரு வண்டி வந்து தூக்கிவிட்டதுகுய்யோ முய்யோ என்று கத்தி தப்பித்தான்வண்டியை ஓட்டி வந்தவன் விட்ட அரையில் மூன்று நாட்கள் குயில் பாட்டு மட்டுமே கேட்டது. 


அன்றிலிருந்து ஒன்று தெளிவாகியது . சிமிண்ட்டில் செய்த வட்டமான தொட்டிகளே இவனுக்கு தோது படும் என்று . ஏறி குதிக்க வேண்டாம்.  கைவிட்டு எடுத்து பார்க்கலாம்உள்ளே ஏதும் ஜந்து இருந்தால்குறிபார்த்து கல்லால் அடிக்கலாம்வெளியே நாய் இருந்தாலும் , கால் காததூரத்தில் இருந்தே துரத்தலாம். 


பசி அதிகமாகியது.ஆறு தொட்டிகளை பார்த்து விட்டான்வெறும் பிளாஸ்டிக் குப்பைகளே இருந்தனவயிறு ரொம்பி இருந்தால்அதை எடுத்துசில காசு தேத்தலாம்.  என்ன பெரிய நகரம்குடிக்க தண்ணீர் கூட இல்லைகுப்பை தொட்டியில் சோறு இல்லைவீட்டை தட்டி தண்ணீர் கேட்டால் கூட  அடிக்க வருகிறார்கள்எல்லா குப்பை தொட்டிகளையும் நாசப்படுத்தி வைத்திருந்தார்கள் . நாற்றம் பிடித்த மனிதர்கள்.. இவர்களுடன் எல்லாம் வாழ வேண்டுமா


ஏன் வாழக்கூடாது என்பது போல காட்சி தந்தது அந்த ஏழாவது குப்பை தொட்டி . 


இதில் மட்டும் சோறு கிடைத்தது விட்டால்முப்பாத்தம்மன் கோயில் வாசலில் இனி செருப்பு திருடுவதில்லை என்று முடிவெடுத்தான் .தொட்டியை நோக்கி விரைந்தான்ஒரு நாயும் அந்த தொட்டியை சுற்றி வர ஆரம்பித்ததுகுப்பை தொட்டிக்கு அருகில் சென்றான்நாய் வல் என்றதுஓங்கி ஒரு உதை விட்டான்வாலை சுருட்டி ஒதுங்கியதுவலியவனே இங்கு வாழ தகுதியானவன் என்பதை அன்றைய தினமும் உணர்த்தியது. 





குப்பை தொட்டியில் மேலே இருக்கும்தெர்மகோலை எடுத்து பார்த்தான்மருத்துவ குப்பைகளாக இருந்ததுஅவற்றை  ஒதுக்கினான் . பீசா டப்பா ஒன்று இருந்ததுஅவன் கண்களில் ஒளி மின்னியதுஏதோ ஒரு புண்ணியவானுக்கு பீசாவின் ஓரம் பிடிக்கவில்லை போலவட்டமாக அதைமட்டும் விட்டு வைத்திருந்தான்எடுத்து உன்ன ஆரம்பித்தான்இதை போன்ற கடினமான சோற்றை உண்ணும் பொழுது நிதானம் முக்கியம் என்பதை அனுபவத்தால் அறிந்திருந்தான்மெதுவாக மென்று தின்றான்இதை மட்டுமே  தின்றால் அடுத்த நாள் காலை சங்கட பட வேண்டும்,  அதனால்  அதை ஓரம் கட்டினான்உள்ளே தோண்டி துழாவ ஆரம்பித்தான். 

கையில் சுருக் என்று ஏதோ குத்தியதுகுத்திய ஊசியை புறம் தள்ளினான். 


நான்கு நிமிட தோண்டலில் தொட்டியின் தரை தட்டியதுஆனால் தரைமண் இருக்க வேண்டிய இடத்தில்  ஒரு கதவு தெரிந்தது . திறந்தான். ஆயிரம் சூரியன் ஒளி அடித்ததுஉள்ளே இறங்கினான்சினிமா படங்களில் மட்டுமே வரும் அறுசுவை உணவை , எங்கு திரும்பினாலும் கண்டான்கனவா இல்லை நனவா என்றெல்லாம் யோசிக்கவில்லைசாப்பிட ஆரம்பித்தான்ஆடுகோழி என வகை வகையாகரக ரகமாக இருந்ததுஇவ்வளவு இருக்கும் என்று தெரிந்திருந்தால் அந்த நாயை அடித்திருக்க வேண்டாமே  என்று நினைத்தான். மூலையில் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான். இவனிடம் அடி வாங்கிய அதே நாய் . ஒரு ஓரத்தில் நொண்டிக்கொண்டு மூன்று காலில் நின்றது . 


அதை நோக்கி பயணிக்க ஆரம்பித்தான்போய்க்கொண்டே இருந்தது அந்த வழி . வழியெல்லாம் பசி எடுக்க , எடுக்க சாப்பிட்டுக்கொண்டே போனான்.  வயிறு நிறைந்தால் நாய் தோன்றும்தேடி நடப்பான்பசிக்கும்சாப்பிடுவான்எவ்வளவு நேரம் என்றே தெரியவில்லைநடக்க நடக்க சோறு உலகமே இப்படி இயங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணினான். 


"அய்யே, ஓரமா படுஎன்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தான்


அந்த வழி மறைந்ததுநாய் மறைந்ததுசோறு மறைந்ததுகண்விழித்து பார்த்தான்எதோ ஒரு ஆஸ்பத்திரியில் இருப்பதாக உணர்ந்தான்கண்கசக்கி பார்த்தான்.  பக்கத்தில், காலில் கட்டு போட்ட நோஞ்சான் ஒருவன் படுத்திருந்தான்.  இருந்த கட்டிலின் கை பிடித்து எழுந்தான் .


எவனோ ஒருவன் வெள்ளை சட்டை போட்டுகாசு இருக்கா , அப்பா இருக்கா என்று கேட்டுக்கொண்டே இருந்தான் . தலை வலித்தது . சட்டென்று அந்த குப்பை தொட்டியின் ஞாபகம் வந்தது .


அங்கிருந்து எழுந்து, அந்த ஏழாவது குப்பை தொட்டியை நோக்கி ஓட ஆரம்பித்தான்      




இந்த வலைப்பதிவில் தேடு

Categories

Random Posts

3/random/post-list
Blogger இயக்குவது.

Pages

search