பாராந்திரச் சோழர் நாட்டு மக்கள் அனைவரையும் மைதானத்தில் ஒன்று கூடும்படி அறிவித்திருந்தார். ஏற்கனவே 100 நாட்கள் பிழிந்து எடுத்ததைத் போல , இப்பொழுது என்ன செய்யப் போகிறாரோ என்ற பயத்துடனே குழுமினார்கள்.
நினைத்தது போலவே , “இனி இந்த நாட்டு மக்கள் அனைவரும் யவன மொழி கற்க வேண்டும் “ என்று அறிவித்தார்.
இது என்னடா புது வம்பா போச்சு, என்று மக்கள் ஸ்தம்பித்து நின்றனர் .
கூட்டத்தில் ஒருவன் சன்னமாகச் சொன்னான். “விஷயம் தெரியுமா? அரசருக்கு யவன நாட்டு இளவரசியின் மீது ஒரு கண். அவள் இங்கே பேசிப்பழக சிரமப்படக்கூடாதே ! ” என்று கண்ணடித்தான்
மக்களின் முணுமுணுப்பு அரசரின் செவிகளை எட்டியது.
அரசர் பொய்க் கோபத்துடன் அறிவித்தார் “இங்கே பெண் கிடைக்காமல் சுற்றித்திரியும் வாலிபர்களுக்கு யவன தேசம் பெண் தர முன்வந்துள்ளது , புரிகிறதா?”.
மக்கள் ஆமோதித்தனர் .
ஏதோ தன் சுயநலத்தில், பொதுநலமும் இருந்ததால் தப்பித்தோம் என்று பெருமூச்சு விட்டார் .
மணமான ஆண்கள் அரசரைச் சபித்தபடி அங்கிருந்து விலகினர் .