Posted by
valaithinni
“டேய்ய்ய்ய் “ - வினுவின் குரல் அண்டார்டிகாவின் மத்தியில் இருந்த ஸ்னோ ரூமின் நாற்றிசை யிலும் எதிரொலித்தது . “பாத்ரூம நான் கிளாக் பண்ணல டா ” மூன்றடுக்குப் போர்வையை விலக்கியபடி, அரைத் தூக்கத்தில் உண்மையைக் கக்கினான் முருகன். “கருமாந்திரம் , அதில்லடா - கொசுவக் காணோம்”. மைனஸ் பதினேழு டிகிரியில் புது கொசுக்கு எங்கே செல்வது என்ற கவலை அவன் குரலில் தெரிந்தது. “கன்டைனரில் நல்லாப் பாரு, தூங்கப் போயிருக்கலாம்” முருகன் கனவில் பாதி நினைவில் மீதி எனப் பதில் தந்தான் . அவன் மறுபடி உறங்க முற்பட, தலையணையைத் தூக்கி அடித்தான் வினு. துப்பாக்கிக் குண்டிலிருந்து தப்பிவிட்ட மான் போலத் துள்ளி எழுந்தான் முருகன் . நெஞ்சைத் தொட்டுப் பார்த்து விட்டு , அப்பாடா என்றான் . ஊருக்கெல்லாம் செய்தி சொல்லியாகிவிட்டது. இந்தியப் பிரதமர், அமெரிக்க அதிபர் எல்லாம் வருவார்கள். அவர்களிடத்தில் வெற்று டப்பாவை எப்படிக் காட்டுவது என்ற பதற்றம் அவர்களின் செய்கைகளில் இருந்தது. அவர்கள் எல்லா இடத்திலும் துழாவினார்கள். ஹீட் சென்சார் , அல்ட்ரா வயலட் என சகலத்தையும் கொ...
- Get link
- X
- Other Apps